மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியக் குழு சார்பில் கீழவெளியூர் கடைவீதியில் அரசியல் விளக்க, நிதியளிப்பு பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.40,000 ஒன்றியக்குழு சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனியப்பன், ரெத்தினம், பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.