கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் காருடையாம் பாளையம்,க.பரமத்தி,தென்னிலை மேற்கு ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 3 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பகுதிகளில் நிழற்குடை இல்லாததால் இக்கல்லூரிகளின் மாணவர்கள் சாலையோரம் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.
ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் பல லட்சம் ரூபாய் தொழில்வரியாக செலுத்தி வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகங்கள் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளின் முகப்பில் நிழற்குடை அமைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.