கொளந்தானூர் பகுதியில் விரைவில் மருத்துவக்கல்லூரி பணிகளைத் தொடங்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை கரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூர் ராமானூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் கரூர் நகரின் மத்தியப் பகுதியான சணப்பிரட்டி கிராமத்தில் பசுபதிபாளையம் கொளந்தானூர் அருகே காந்திகிராமம் பகுதி இருப்பதால் அங்கு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருப்பதால் விரைவில் அரசு அறிவித்த இடத்தில் உடனே மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். இனியும் பணிகள் தொடங்க தாமதமானால் பணிகள் தொடங்கும் வரை தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தாந்தோணிமலை, வெங்கமேடு, சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.