கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டி கரூர் மாவட்டத்திற்கு மே 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்நிகழ்வு நடைபெறவுள்ள 31-ஆம் தேதி மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.