அரவக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, மண்டியிட வைத்த பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவி அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார்.
அரவக்குறிச்சியில் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் நாகம்பள்ளியைச் சேர்ந்த பெருமாள் மகள் ரூபினா (16) 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆம் தேதி பள்ளியில் சக மாணவியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பள்ளி ஆசிரியர் தங்கவேல் ரூபினாவை அழைத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியரிடம் மாணவி இதுகுறித்து முறையிட்டார். தலைமை ஆசிரியர் மாணவியை ஒரு மணிநேரம் மண்டியிட வைத்து அனுப்பினாராம். தனது பெற்றோரிடம் ரூபினா தெரிவித்ததையடுத்து, மாணவியின் தந்தை பெருமாள், ஆசிரியர் தங்கவேல் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளித்தார்.