கரூர் நாரதகான சபாவில் நவம்பர் 24 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஆன்மிக உபநியாச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நாரதகான சபாவின் முன்னாள் தலைவர் மறைந்த ஏ.எஸ்.ஜனார்த்தனன் நினைவாக நடைபெறும் இந்த ஆன்மிக உபநியாசத்தில் நவம்பர் 24 ஆம் தேதி கிருஷ்ணவதாரம், 25 ஆம் தேதி கிருஷ்ண லீலை, 26 ஆம் தேதி ருக்மணி கல்யாணம் ஆகிய தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
உபநியாசங்களை தாமல் ஸ்ரீ ராமகிரு,ஷ்ண சுவாமி, ஸ்ரீ பெருந்தேவி ஆகியோர் வழங்குகின்றனர். ஏற்பாடுகளை கரூர் வைஸ்யா வங்கியின் இயக்குநரும், சபா தலைவருமான ஏ.ஜே.சூரியநாராயணா செய்துள்ளார்.