வரும் 5-ம் தேதி காணியாளம்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர்(இயக்குதல், காத்தலும்) கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 5-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் காணியாளம்பட்டி, முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.