க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை இரவு திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் மின் ஒயரில் தீ பிடித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
க. பரமத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழ மை இரவு 7 மணிக்கு திடீரென மின் கசிவு ஏற்பட்டு வயரில் தீப்பிடித்தது. இதனால் பங்க் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, க. பரமத்தி காவல் நிலையத்துக்கும்,கரூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் பங்கு முழுவதும் தண்ணீர் அடித்துச் சென்றனர்.