தாந்தோணிமலை, வேப்பம்பாளையத்தில் அக்டோபர் 23 மின்தடை

தாந்தோணிமலை மற்றும் வேப்பம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை (அக். 23) மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரியச் செயற்பொறியாளர் கு. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரூர் மின்பகிர்மான கோட்டம், தாந்தோணிமலை மற்றும் வேப்பம்பாளையம் துணை மின்நிலையங்களில் வரும் 23-ம் தேதி மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், புத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் மற்றும் வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com