கரூரில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு

கரூரில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

கரூரில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
கரூர் ஜவஹர்பஜாரில் அமைக்கப்பட்ட இந்த புதிய ஷோரூமை தனிஷ்க் (டாடா குரூப்ஸ்) துணைத் தலைவர் சந்தீப்குலாலி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ம. சின்னசாமி, ஏகேசி.பெட்ரோல் பங்கின் ஏவி. கந்தசாமி, பிரேம் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பிரேம் வீரப்பன், ஸ்டன்டர்ஸ் குமார், ஹாஜி தோட்டம் பஷீர்அகமது, அட்லஸ் ஏற்றுமதி ஜவுளி நிறுவனத்தின் கஸ்தூரி நாச்சிமுத்து, மல்லிகா டெக்ஸ்டைல்ஸ் சாந்திராமலிங்கம், நிர்மலாகும்மராஜா, மெட்ரோ பேப்ரிக்ஸ் நீலாவதி, கோபாலகிருஷ்ணன், ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ் வித்யாஸ்டீபன்பாபு மற்றும் ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் (பி) லிமிடெட் (சேவல் மார்க் பட்டாசு, சிவகாசி) மற்றும் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அருணா ஏஜென்சிஸ் ராஜேஷ், செல்வகுமார், விற்பனைப் பிரிவு மேலாளர் ஸ்ரீ கிருஷ்ணா, நிறுவன அதிகாரி ராஜா மற்றும் நிர்வாகிகள்,தனிஷ்க் ஜூவல்லரி பணியாளர்கள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com