கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்னக திருப்பதி என்றும், திருமலைக்குச் செல்ல முடியாத சோமகர்மா என்ற பக்தருக்கு மனமிறங்கி திருப்பதி வெங்கடாசலபதியாக தானாகத் தோன்றி காட்சியளித்தமையால், தாந்தோன்றிமலை பெருமாள் எனவும் போற்றப்படும் கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, வரும் 26-ம் தேதி சுவாமி வெள்ளி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருக்கல்யாண உற்சவம் 29-ம் தேதியும், தேரோட்டம் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, 13-ம் தேதி புஷ்பயாக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர் ம. சூரியநாராயணன், செயல் அலுவலர் நா. சுரேஷ் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.