வாங்கல் அருகே லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் வாங்கல் அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). லாரி ஓட்டுநர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் வறுமைநிலவியதால் விரக்தியில் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.