கரூரில் திகவினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திக மாவட்டத் தலைவர் ப. குமாரசாமி தலைமை வகித்தார். மாநில சட்டத்துறை துணைத் தலைவர் மு.க. ராசசேகரன், பொதுக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, சே. அன்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மா. கண்ணதாசன், செயலர் கடவூர் மணிமாறன், துணைச் செயலர் கருவூர். கன்னல், துணைத் தலைவர் இரா. குடியரசு உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திகவினர் திரளாக பங்கேற்றனர்.