தவிட்டுப்பாளையத்தில் வெள்ளப் பாதிப்புக்கு உதவி

தவிட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வைகளை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

தவிட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வைகளை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் 57 வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. அவர்கள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அவர்களுக்கு வியாழக்கிழமை இரவு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பாய், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், இளைஞரணி செயலர் விசிகே. ஜெயராஜ், ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com