வேலாயுதம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் காகிதபுரம் டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் அண்மையில் ஈரோடு கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கட்டா, குமித்தே ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கரூர், காகிதபுரம் டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிற பெல்ட்டுகளும், சான்றிதழ்களும் பெற்று மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் டாக்டர் வா.மு. அய்யப்பன், இருபால் ஆசிரியர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.