தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் திருத்தேரோட்டம் மார்ச் 1-ல் நடைபெற உள்ளது.
தென் திருப்பதி எனப்படும் இக்கோயில் மாசி மகத்தேரோட்டம் மற்றும் தெப்பத்தி ருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி துவஜாரோஹணம், மார்ச் 1-ல் திருத்தேரோட்டம், 3-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருச்சி இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர்கள் ம. சூரியநாராயணன், நா. சுரேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.