பள்ளி மாணவர்கள் களப்பயணம்

கரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக புதன்கிழமை சுக்காலியூரில் உள்ள ஜவுளி பின்னலாடை நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

கரூர் வெற்றிவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக புதன்கிழமை சுக்காலியூரில் உள்ள ஜவுளி பின்னலாடை நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் களப்பயணமாக புதன்கிழமை கரூர் சுக்காலியூரில் உள்ள சிறந்த ஜவுளி பின்னலாடை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் போர்வைகள், விரிப்புகள், திரைச்சீலைகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், துண்டுகள் ஆகியவற்றின் உற்பத்திப் பணிகள் மற்றும் மூலப்பொருள் தயாரிப்பு பணி, நூலுக்கு சாயம் ஏற்றுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுமுறை பயன்படுத்துதல், ஆடை நெய்வதற்கு நூல் தறியில் ஏற்றுதல், போர்வையாக வெளிவருதல், தரம் பிரித்து சரிபார்த்தல் போன்ற பல தயாரிப்பு பணிகளை நேரடியாகக் கண்டறிந்தனர்.  ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com