தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி மற்றும் பெண்கள் ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு வளாக மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.24, 25) ஆகிய 2 தினங்கள் நடைபெற உள்ளது.
போட்டிகளில் சேலம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சென்னை, திண்டுக்கல், கோவை, வேலூர், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வீரர், வீரங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகத்தலைவர் நடேசன், காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (உற்பத்தி) சுப்ரமணியன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்கள். 25-ம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் ஆலையின் பொது மேலாளர் (மின்சாரம் மற்றும் கருவியியல்), புரவலர் பாலசுப்ரமணியன் மற்றும் மனித வளத்துறை பொதுமேலாளர் பா. பட்டாபிராமன் ஆகியோர் வாழ்த்துரையும், செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்.வி.ஆர். கிருஷ்ணன் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கு பரிசு வழங்கிப் பேசுகிறார்.