கரூர் மாவட்டத்தில் நடக்க இருந்த ரேஷன் கார்டு குறைதீர் முகாம் வரும் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை அங்காடிகள் சம்பந்தமான குறைகள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் உணவுப் பொருள் வழங்குதல் தொடர்பான பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் 2018 ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் நாள் கூட்டம் 13-ம் தேதி கரூர் மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இக் கூட்டம் போகிப்பண்டிகை அன்று கரூர் வட்டத்தில் புத்தாம்பூர் விஏஓ அலுவலகத்திலும், அரவக்குறிச்சி வட்டத்தில் ஆலமரத்துப்பட்டி விஏஓ அலுவலகத்திலும், குளித்தலை வட்டத்தில் குமாரமங்கலம் விஏஓ அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் சிவாயம் வடக்கு விஏஓ அலுவலகத்திலும், கடவூர் வட்டத்தில் மத்தகிரி விஏஓ அலுவலகத்திலும், மண்மங்கலம் வட்டத்தில் அப்பிபாளையம் விஏஓ அலுவலகத்திலும், 20-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.