கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணராயபுரம் மேற்கு, வடக்கு மற்றும் கடவூர் வடக்கு, பேரூராட்சி, பழைய ஜயங்கொண்டம் பேரூராட்சி, புலியூர் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட 1500 அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பை மற்றும் வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் காந்திகிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதாமணிவண்ணன் தலைமை வகித்து வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், செயற்குழு உறுப்பினர் ஆர். மணிவண்ணன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியச் செயலர் (பொ) பொரணிகணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.