ஊதியம் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

ஊதியம் கோரி கோயம்பள்ளி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டின் முன் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் குடிநீரேற்று

ஊதியம் கோரி கோயம்பள்ளி அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டின் முன் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் குடிநீரேற்று ஆபரேட்டர்கள் சனிக்கிழமை பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கோயம்பள்ளி ஊராட்சியில் பணியாற்றும் 3 துப்புரவுப் பணியாளர்கள், 3 குடிநீர் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு ஊராட்சி சார்பில் கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். இதுதொடர்பாக அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனிடமும் கேட்டும் பயனில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 6 பேரும் சனிக்கிழமை ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஊதியம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி எழுத்தர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் போய்க் கேளுங்கள் எனக் கூ றினாராம். இதையடுத்துகவுண்டம்பாளையத்தில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் வீட்டின் முன் அமர்ந்து மண் சட்டி ஏந்தி, நாமம் போட்டவாறு அமர்ந்து பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மற்றும் பசுபதிபாளையம் போலீஸார் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com