தமிழக முதல்வருக்கு கரூரில் வரவேற்பு

தேனி செல்லும் வழியில் கரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி செல்லும் வழியில் கரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், குரங்கனி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் இருந்து கரூர் வழியாக திங்கள்கிழமை தேனி சென்றார். 
கரூரில் மதுரை புறவழிச்சாலையில் உள்ள சுக்காலியூரில் அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன்,  அதிமுக  நிர்வாகிகள் ஏ.ஆர்.காளியப்பன், எஸ்.திருவிகா, கமலக்கண்ணன், மார்கண்டேயன், வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com