மணல் அள்ளிய லாரி பறிமுதல் 

வாங்கல் காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

வாங்கல் காவிரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், நெரூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வியாழக்கிழமை இரவு ஒருவர் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அங்கு அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய சேலம் மாவட்டம் மேட்டூரைச் முத்துசாமி(37) போலீஸாரைக் கண்டதும் ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீஸார் லாரியை பறிமுதல் செய்து கரூர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com