கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சாலையின் மையத்தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் சோனைமுத்து(34). இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் பழனி(24), மகேஷ் (33) ஆகியோருடன் கரூரில் உள்ள சோனைமுத்து உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளனர். இந்நிலையில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அரவக்குறிச்சி அருகே தகரக்கோட்டை என்ற இடத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென நிலைத்தடுமாறி கார், சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சோனைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.