கரூர் சட்டமன்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாங்கலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில நெசவாளர் அணித் தலைவர் பாலமுருகன், கரூர் பாராளுமன்ற அமைப்பாளர் கே.சிவசாமி, மாவட்டத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
வருகிற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைத்து செயல்படுவது, பாஜகவின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுவது, மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் கைப்பற்ற பாடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.