ஏப். 27-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப். 27 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப். 27 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமையல் எரிவாயு உருளைகள் மறுநிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவுசெய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக புகார்களை பெற்று, உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப். 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  
இக்கூட்டத்தில், சமையல் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எரிவாயு நுகர்வோர், எரிவாயு சம்பந்தமான குறைகள் இருந்தால், இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகளை களைவது தொடர்பாக ஆலோசனைகளும் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com