பெரம்பலூர் அருகே நண்பரை பாட்டிலால் குத்திக் கொன்ற இளைஞர் கைது

பெரம்பலூர் அருகே நண்பரை பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே நண்பரை பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமம், வடக்கு காலனித் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (39). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர், பெரம்பலூர் அருகேயுள்ள அயிலூர் கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்து வெள்ளிக்கிழமை காலையில் தெரியவந்தது.
இதுகுறித்து, சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாசம் அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரெங்கநாதன் (27) என்பவர், ராஜாவை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து, ரெங்கநாதனிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நெருங்கிய நண்பர்களான ராஜாவும், ரெங்கநாதனும் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜயகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரை, விளாமுத்தூர் பிரிவு சாலையில் கற்களால் அடித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், ராஜா கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஜாமீனில் வெளியில் வந்த ரெங்கநாதனும், ராஜாவும் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியபோது, தன்னை ஜாமீனில் வெளியே கொண்டு வராதது ஏன்? என, ரெங்கநாதன் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரெங்கநாதன், ராஜாவை மது பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ரெங்கநாதனை கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com