அடையாளம் தெரியாதவர் மயங்கிவிழுந்து சாவு

பெரம்பலூரில் அடையாளம் தெரியாதவர் மயங்கிவிழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பெரம்பலூரில் அடையாளம் தெரியாதவர் மயங்கிவிழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சுமார் 45 வயதுள்ள அடையாளம் தெரியாதவர் மயங்கி விழுந்தார். இதையறிந்த, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று,  இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com