செப். 1 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்  நடைபெறவுள்ளது என்றார்  ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்  நடைபெறவுள்ளது என்றார்  ஆட்சியர் வே. சாந்தா.
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். மழை காலத்திலும், பனிக்காலத்திலும் இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மற்றும் காற்றின் மூலமாக மிக விரைவில் பரவக் கூடியது. மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். இதன் காரணமாக கால்நடைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்துவிடும்.
வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டு பால் கறவை மிகவும் குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி உயிரிழக்கவும் நேரிடும். எனவே, இந்நோய் தாக்காமல் இருப்பதற்கு மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வதே சிறந்த நிவாரணம். பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையால் கோமாரி நோய் தடுப்புத் திட்டம் 13-வது சுற்றின் கீழ்  செப். 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே,  கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 4 மாத வயதுள்ள கன்று முதல் சினை, கறவை பசு உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசிப் போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com