பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில், இந்து முன்னணி சார்பில், அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைக்கக் கோரி காவிக்கொடி ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நகர பொதுச்செயலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகலாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தி உடனடியாக அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் அமைக்க
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் நடராஜன், நகரச் செயலர் கஜேந்திரன், ஒன்றியச் செயலர் பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பொறுப்பாளர்கள் அண்ணாமலை, ராஜமாணிக்கம்,
தினேஷ், ராஜா, சக்திவேல், கந்தசாமி, கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலர் துரைக்கண்ணு நன்றி கூறினார்.