தொண்டமாந்துறையில் நாளை சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டாமாந்துறை கிராமத்தில் கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டாமாந்துறை கிராமத்தில் கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.
தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற்று பயனடையும் வகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டாமாந்துறை ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் புதன்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் சென்று, உறுப்பினராக இணைந்து தொழிலாளர் நலவாரிய திட்டங்களை பெற்று பயன்பெறலாம் என, தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com