பெரம்பலூரில், ஆக. 5 ஆம் தேதி நடைபெறும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்,
பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோலப்போட்டியும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளும், 19 ஆம் தேதி வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோலப் போட்டியும், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
20 ஆம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோலப்போட்டியும், 21 ஆம் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கோலப்போட்டியும் நடைபெற உள்ளன.