பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டமலைசந்து, அனுக்கூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.