பெரம்பலூரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இருக்காது.  

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இருக்காது.  
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாழக்குடியிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் மூலமாக பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் 116 வழியோர கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) மாலை 7 மணி வரை நடைபெற உள்ளதால், அன்று குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பெரம்பலூர் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் வழங்க இயலாது என, நகராட்சி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com