தனியார் கல்லூரி பேருந்துகள் மோதல்: 10 மாணவர்கள் காயம்

பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் மாணவ, மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்துகள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் மாணவ, மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூர் தனியார் கல்லூரி பேருந்து குன்னம் கிராமத்திலிருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் நோக்கி வெள்ளிக்கிழமை காலை வந்துகொண்டிருந்து. இந்தப் பேருந்து கவுல்பாளையம் அருகேயுள்ள அருமடல் பிரிவு சாலையில் வந்தபோது, துங்கபுரம் கிராமத்திலிருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்ற மற்றொரு தனியார் கல்லூரி பேருந்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது, கல்லூரி பேருந்துகள் ஒன்றின்மீது ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.
இதில், மாணவிகள் அறிவுக்கொடி (20), மணிக்குயில் (20), செல்வராணி (18), மாணவர் சாத்தப்பிள்ளை (17) உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.  இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் சூரியநாராயணன் (27) அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் வழக்குப் பதிந்து, மற்றொரு கல்லூரி பேருந்து ஓட்டுநர் ராஜ்கிரணை (27) கைது செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com