தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் மே 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் எஸ். சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூன் 2017 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மே 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, இத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மே 22 ஆம் தேதி மாலை 6 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தையும், அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.