திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இந்திய விமானப் படைக்கு (பெரம்பலூர் மாவட்டம்) ஆள் சேர்ப்பு முகாம் வரும் திங்கள்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:
ஏர் மேன் பணியிடத்திற்கான இந்தத் தேர்வில், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 7.7.1997 முதல் 20.12.2000-க்குள் பிறந்த திருமணமாகாத ஆண்கள் பங்கேற்கலாம். திங்கள்கிழமை (மே 22) காலை 6-10 மணி வரை அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு தேர்வு நடைபெறும்.
தகுதி உடையவர்கள் தங்களது 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றுகளுடன் செல்லவேண்டும். மாற்றுச்சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பித்திருந்தால், பள்ளி அல்லது கல்லூரி முதல்வரிடம் அசல் சான்றுகள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற உறுதிசான்றிதழுடன், சுயச் சான்றொப்பமிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் தகவல்களை www.airmenselection.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 044-22390561, 22395553 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக அல்லது co.8asc-tn@govt.in மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.