பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோ மோதி தனியார் கல்லூரி பணியாளர் சாவு

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோ மோதியதில் தனியார் கல்லூரி பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். தொடர் விபத்தை தடுக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே ஷேர் ஆட்டோ மோதியதில் தனியார் கல்லூரி பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். தொடர் விபத்தை தடுக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கோவிந்தராஜ் (52). இவர், வாலிகண்டபுரத்தில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியிலிருந்து, வேளாண்மை கல்லூரிக்கு செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஷேர் ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம்  உறுதி அளித்ததின்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் காரை கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமாரை (24) கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com