பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்தது. குறிப்பாக, பெரம்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், வாலிகண்டபுரம், பாளையம், ஈச்சம்பட்டி, லாடபுரம், குரும்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, குளிர்காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.