பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.  பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.  பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்தது. குறிப்பாக, பெரம்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர், வாலிகண்டபுரம், பாளையம், ஈச்சம்பட்டி, லாடபுரம், குரும்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, குளிர்காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com