நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதியை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது, சென்னை மாநில நுகர்வோர் வழங்குதல் பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனு:
பெரம்பலூரில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த நீதிமன்றம் பல ஆண்டுகளாகவே வாடகை கட்டடத்தில் முதல் தளத்தில் இயங்கி வருவதால், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்பாக ஏறிச்செல்ல இயலவில்லை. எனவே, நுகர்வோர் நீதிமன்றத்தை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், கடந்த 6 மாதங்களாக நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் பதவி காலியாக உள்ளது. மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டல், மக்களுக்கு சேவைக் குறைபாடு இழைக்கப்பட்டால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகுவோம். ஆனால், குறைதீர் மன்றத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால், நீதித்துறையில் சேவைக் குறைபாடும், வழக்குகள் தீர்க்கப்படாமலும் உள்ளது. இந்த வழக்குகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமானால், நீதிமன்றத் தலைவர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுவரை, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவரை கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்து தீர்வு காண வழிவகை செய்யவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com