பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
ஆலத்தூர் வட்டம், பாடாலூரைச் சேர்ந்தவர் செ. முத்துராஜ் (68). இவர், வெள்ளிக்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் கொண்டக்காரன் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முதியவர் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாடாலூர் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், கார் ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த ராஜாவை (43) கைது செய்தனர்.