வேப்பந்தட்டை, சிறுவாச்சூரில் ஏப்ரல் 26 மின் நிறுத்தம்

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை, பேரளி, சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை (ஏப். 26) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை, பேரளி, சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை (ஏப். 26) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே. புதூர், மேலப்புலியூர், நாவலூர் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை (ஏப். 26) காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பேரளஇ, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீலவாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகளை நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துளஅளார் உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரிவித்துள்ளார். சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கரிகால் சோழன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com