பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 17) நடைபெறுகிறது.
பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர்கள் நல வாரியங்களில் தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களின் நலத் திட்டங்களில் பயனடையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை எளம்பலூர் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வயது சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -3 ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.