பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி கோயிலில் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தின் சார்பில், 36-வது ஆண்டு தொடக்க விழா, பங்காரு அடிகளார் 75-வது பிறந்தநாள் விழா மற்றும் ஆடிப்பூர விழா புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.
குரு பூஜையுடன் கலசவிளக்கு பூஜை மற்றும் வேள்வி பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை செவ்வாடை அணிந்த ஆதிபராசக்தி பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள கோயிலில் இருந்து சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு வழியாக சென்று மீண்டும் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில், பெரம்பலூர், சிறுவாச்சூர், பாடாலூர், குரும்பலூர், அம்மாபாளையம், அரணாரை உள்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.