பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் தென்னை விவசாயிகளுக்கு நடைபெற்று வந்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் வாலிகண்டபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் கடந்த 3 ஆம் தேதி பயிற்சி தொடங்கியது.
தென்னைமரத்தின் சாகுபடிநுட்பங்கள், இயந்திரம் கொண்டு தென்னைமரம் ஏறுவதற்கு குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் முகாமில் பங்கேற்றனர்.சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், இயந்திரம் கொண்டு தென்னைமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில் விரைவாக மரம் ஏறிய 3 பேருக்கு அகரம்சீகூர் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் மணிகண்டன் பரிசுகளை வழங்கினார்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானியும், தலைவருமான நேதாஜி மாரியப்பன் தென்னைமரத்தில் ஏறும் கருவியை வழங்கினார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.