பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதும் அச்சத்தைப் போக்க தேர்வைக் கொண்டாடுவோம் என்னும் தலைமைப்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைமை வகித்த, அக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ம. சிவசுப்ரமணியம் பேசினார். தொடர்ந்து, பேச்சாளரும், திரைப்பட நடிகருமான தமிழகத்தின் முதன்மை மாணவர் பயிற்சியாளர் தாமு பயிற்சி அளித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், பள்ளி முதல்வர் கலைச்செல்வி, ஆகியோர் பங்கேற்றனர்.