அன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அன்னை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு தலைமை வகித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினார். 
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஞான. சிவக்குமார், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் மீனா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராசன், பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார், அரிமா சங்கத் தலைவர் ஞானசேகர், பொருளாளர் தியாகராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேல். சரவணன், திருச்சி அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்பாபு, செயலர் உதயக்குமார் உள்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் மாணிக்கம் வரவேற்றார். தமிழாசிரியர் கலைவாணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com