பெரம்பலூர், அரியலூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுதாரருக்கு குறித்த காலத்தில் உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூர் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் சோலைமுத்து, பணியின்போது உயிரிழந்ததால், அவரது வாரிசு எஸ்.எஸ். ராஜதுரைக்கு, கருணை அடிப்படையில் பெரம்பலூர் கோட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை, கிணற்றில் இருந்து தவறி விழுந்த வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த சர்தார்கான் மகன் ரியாஸ் அகமது குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 169 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
அரியலூரில்...
அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 958 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.லட்சுமிபிரியா வழங்கினார்.
கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 340 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கலப்பு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் முதலவரின் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற 5 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 20 கிராம் தங்க நாணயங்கள், பட்டம் அல்லாதோர் 12 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை மற்றும் தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 48 கிராம் தங்க நாணயங்கள்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.14,870 மதிப்பில் செயற்கை அவயங்கள், 1 பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,088 மதிப்பில் பிரெய்லி கை கடிகாரம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 958 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட சமூக அலுவலர் ப.பூங்குழலி,சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெ.பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஆர்.பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com