பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (6). இவரது மனைவி சங்கீதா (45). இருவரும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர், புதன்கிழமை மாலை சொந்த கிராமத்துக்கு செல்வதற்காக, மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பலத்த காயமடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சுஜீத் சந்திரனை (40) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.