பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூர் உப கோட்டத்துக்குள்பட்ட மின் இணைப்புகளை, மின்வாரிய அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தலைமையில், மின் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் உள்பட 18 பேர் கொண்ட குழுவினர் சிறுவாச்சூர் உபகோட்டத்துக்குள்பட்ட செட்டிக்குளம் தெற்கு பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகிர்மானங்களில் உள்ள 760 மின் இணைப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்படும் வகையில் மின் நுகர்வோர்கள் செயல்படக் கூடாது என அறிவுறுத்திய அலுவலர்கள், இனிவரும் காலங்களில் திடீர் ஆய்வு செய்து வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தும் நுகர்வோர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். நுகர்வோர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை, அதற்குண்டான பயன்பாடுகள் தவிர தவறான வழிகளில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.